Monday, May 7, 2012

முச்சக்கரவண்டி பயணத்தில் புதிய கட்டுப்பாடு: பின் இருக்கையில் 3 பேர் மாத்திரம்
[ செவ்வாய்க்கிழமை, 08 மே 2012, 03:08.47 AM GMT ]
முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாரதிக்கு பின் ஆசனத்தில் கட்டாயமாக மூவர் மாத்திரமே பயணிக்க முடியும் என காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த விபத்துக்களை கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை இடம்பெற்ற 27 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 34 பேர் பலியாகியுள்ளனர்.
ஆறு இலட்சத்து 70 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் தற்போது இலங்கையில் பதிவு செய்யப்பட்டு செயற்பாட்டில் உள்ளன. இதேவேளை. மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் இந்த பின்புற ஆசனத்தில் 3 பயணிங்கள் கட்டுப்பாட்டை வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment